விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரிகளிலில் கலப்பதை தடுத்திடவும் குப்பைகளை நகரபகுதியில் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த கோரி அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கம் ஏரி, எருமணந்தாங்கல் ஏரி மற்றும் காகுப்பம் ஏரிகளில் நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காமல் நகராட்சி நிர்வாகம் அனைத்து கழிவுகளையும் ஏரிகளில் நேரடியாக தேக்கி வருவதால் நோய்தொற்று ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் சுற்றியுள்ள பகுதிகளில் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மற்றும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் காவல் ஆயுத படைவளாகம் உள்ள இந்தப் பகுதிகளில் நகராட்சி குப்பைகளை சாலையோரங்களிலும், ஏரிகளிலும் கொட்டி பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் காற்று மாசினை உண்டாக்கி நோய் தாக்கத்தை உண்டாக்குவதாக தெரிவித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்யுமாறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரிகளிலில் கலப்பதை தடுத்திடவும் குப்பைகளை நகர் பகுதியில் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த கோரி விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மேலும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.














