மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் தையல், சிலம்பம், ஓவியம், பரதநாட்டியம், பாட்டு, பேச்சு, யோகா, வெஸ்டர்ன் டான்ஸ், மெஹந்தி, ஆரி ஒர்க் உள்ளிட்ட கலைகளை 60 நிமிடத்தில் செய்த சாதனை நிகழ்வை உலக சாதனையாக இன்டர்நேஷனல் வேல்ட் ரெக்கார்டு க்ராணிக்கல்ஸ் பதிவு செய்தது:-
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் மகதி மித்ரா ஆர்ட்ஸ் & கிராப்ட் மற்றும் ஸ்ரீ ஐஸ்வர்யா டைலரிங், ஆரி பயிற்சி மையம், சர்வதேச அதிசயங்களுக்கான சாதனை புத்தகம் சார்பில் “நாளைய உலகம் நம் கையில்” என்ற தலைப்பில் பல கலைகளை ஒரே நேரத்தில் 60 நிமிடத்தில் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் வித்யபாரதி, ராணிசெல்லதுரை ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் தையல், சிலம்பம், ஓவியம், பரதநாட்டியம், பாட்டு, பேச்சு, யோகா, வெஸ்டர்ன் டான்ஸ், மெஹந்தி, ஆரி ஒர்க் ஆகிய நிகழ்ச்சிகள் 60 நிமிடத்தில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டது. இதனை இன்டர்நேஷனல் வேல்ட் ரெக்கார்டு க்ராணிக்கல்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது. வேர்ல்டு ரெக்கார்டு நடுவர் மகேஸ்வரி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கைத்தொழிலான மேக்கப், மெஹந்தி டிராயிங், ஆரிஓர்க் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.














