நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் மற்றும் வண்டுகள் காரணமாக கிராமப்புறத்தைச் சார்ந்த பொதுமக்கள் பாதிப்பு, சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கு போலீஸ் தடை, 30 ஆண்டுகளாக அவலம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை:-
மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாலிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலையில் நெல் உமி கொண்டு, எரிக்கப்பட்டு ஆலை இயங்குவதால், அதிலிருந்து வெளிவரும் கரி துகள் காற்றில் பரவுவதன் காரணமாக அருகில் உள்ள சித்தர் காடு மாப்பொடுகை சோளம்பேட்டை மூவலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது மேலும் இங்கு சேமிக்கப்படும் அரிசி மூட்டைகளில் இருந்து ஒரு வித வண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், 2010ம் ஆண்டு ஆலையை மூட மாசு கட்டுவாரியம் உத்தரவிட்டிருந்தது மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஆலை செயல்படுத்த துவங்கியது இதனை மூட வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தும் பலன் இல்லாத நிலையில் கடந்த மாதம் ஆலையை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆலையை மூடக்கோரி சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக என்று அறிவித்திருந்தனர் அதற்கு காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அங்கு உள்ள கோயிலில் காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்













