மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு , பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய தவெகவினர் :-
மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சி நெடுமருதூர் கிராமத்தில் ராபர்ட் என்பவரின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. கூலி வேலை பார்த்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து போது மின்கசிவு காரணமாக ஊரை தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து கருகியது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்திய ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினர். அத்துடன் ரூ.10,000 ரொக்க தொகையை வழங்கி ஐந்தாயிரம் மதிப்புள்ள மல்லிகை பொருட்களை கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். அப்போது அந்த வீட்டில் பள்ளி படிக்கக்கூடிய ராபட்டின் மகள் தங்கள் பகுதிக்கு சரிவர பேருந்து வசதி இல்லை எனவும் , இதன் காரணமாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று மீண்டும் திரும்ப முடியாத சூழல் உள்ளதாகவும் , குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.















