April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!

by sowmiarajan
August 29, 2025
in News
A A
0
திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ஒரே இடத்தில் குவிந்த 6 லட்சம் புத்தகங்கள்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 12-வது ஆண்டு புத்தகத் திருவிழா, தனியார் பள்ளி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி ரிப்பன் வெட்டி, இத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா, வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை வாசகர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில், வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 126 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விகடன், காலச்சுவடு, எதிர் வெளியீடு, பைரவி, பாரதி, வெற்றி மொழி, மங்கை, வள்ளலார், ராஜ் மோகன், வைகை கறை மற்றும் சத்யா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களும், 30 விற்பனையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மொத்தம் 6 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு ரூ.5 மதிப்புள்ள திருக்குறள் புத்தகம் முதல், ரூ.15,000 மதிப்புள்ள அரிய சங்க இலக்கிய நூல்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் படிப்பு, விளையாட்டு, சுய முன்னேற்றம், ஆங்கில நாவல்கள், அறிவியல், சமூகவியல், கணிதம், வேதியியல், அரசியல், வரலாறு, ஆன்மிகம், சமையல், ஜோதிடம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களும் கிடைக்கின்றன. மேலும், நீட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சிறுகதை நாவல்கள் எனப் பரந்த அளவிலான புத்தகங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. புத்தக விற்பனை மட்டுமல்லாமல், வாசகர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், தலைவர்களின் சிறப்புரைகள், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்தத் திருவிழா, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதுடன், அறிவுசார்ந்த ஒரு பண்பாட்டுத் தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: 12th Book FestivalAuthors and ReadersBook DiscussionsBook ExhibitionsBook StallsBookish ActivitiesLiterary Event DindigulLiterary Workshops
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல் விநாயகர் ஊர்வலம்: நக்சல் சிறப்புப் பிரிவின் பாதுகாப்புடன் அமைதியாக நிறைவு

Next Post

அனந்தபுரி ரயிலில் நாய் போல் குரைத்த வட மாநில இளைஞர்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

Related Posts

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா
News

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி
News

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Bakthi

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026
Next Post

அனந்தபுரி ரயிலில் நாய் போல் குரைத்த வட மாநில இளைஞர்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026

Recent News

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.