தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் சபின் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அமைச்சர் ஆனந்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சி காரணமாக அமைச்சர் ஆனந்த் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் இல்லத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்காக அமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். மதியம் தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார் அப்பொழுது நாகர்கோவிலில் உள்ள அண்ணா ஸ்டேடியம் முன்பு திரண்ட தொண்டர்கள் அமைச்சர் ஆனந்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றார் அமைச்சர் ஆனந்த்.














