மயிலாடுதுறை மாவட்டம் மன்னிப்பள்ளம் கிராமத்தில், ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், வைத்தீஸ்வரன் கோயில் மணல்மேடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மன்னிப்பள்ளளம் கிராமத்தில், ஏழு ஏக்கர் பரப்பளவிலான பெரிய குளம் இருந்தது,
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். வெறும் பத்து சென்ட் அளவிலான சிறிய பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு காரணமாக குளம் சுருங்கியது. இதனையா பகுதி கிராம மக்கள் சட்டபூர்வமாக மீட்டெடுத்தனர். பல ஆண்டுகளாக தூர்ந்து போயிருந்த இந்த குளத்தை, வண்டல் மண் எடுப்பதன் மூலம் தூர் வார முடிவு செய்து கிராமம் சார்பில் அனுமதி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் குளம் தூர்வாரப்பட்ட நிலையில், பாதி பணிகள் நிறைவடைந்தது, இந்த கிராமத்தைச் சார்ந்த யாரும் ஆட்சேபனை செய்யாத நிலையில், திடீரென்று குளத்தை தூர்வாரி வண்டல் மண் எடுப்பதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். கோடை காலங்களில் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டப்பாடு நிலவும் நிலையில், இருக்கும் ஒரே நீர் ஆதாரத்தை தூர்வார அரசு அதிகாரிகள் தடை செய்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பள்ளம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் மணல்மேடு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சார்புடையவர்களுக்கு மட்டும் அதிகாரிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.














