September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புற்றுநோய் வலியால் நேர்ந்த விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மின்வாரிய பொறியாளர் மனைவியுடன் தற்கொலை

by sowmiarajan
February 3, 2026
in News
A A
0
புற்றுநோய் வலியால் நேர்ந்த விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மின்வாரிய பொறியாளர் மனைவியுடன் தற்கொலை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ்காலனி தம்பு நகர் பகுதியில், தீராத நோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்த கமலேஷ் (44), தனது மனைவி இலக்கியா (30) மற்றும் 10 வயது மகள் யக்சிதா ஏஞ்சல் ஆகியோருடன் வசித்து வந்தார். இலக்கியா கடந்த ஒரு வருட காலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனின்றி தினந்தோறும் கடும் வலியால் துடித்துள்ளார். மனைவியின் வேதனையைக் கண்டு சகிக்க முடியாத கமலேஷ், தனது மகளைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் “குழந்தையைக் கொன்றுவிட்டு நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” என்று உருக்கமான பதிவை கமலேஷ் அனுப்பியுள்ளார். பதறியடித்து வந்த உறவினர்கள் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர். உயிரிழந்த சிறுமி யக்சிதா ஏஞ்சல், நாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு முன்பாக கமலேஷ் காரில் சென்றபடி பேசிய உருக்கமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அதில், தனது மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தங்களுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல்களை நேரடியாகத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்தை ஏற்கனவே ஆலயத்தில் செலுத்திவிட்டதாகவும், தனது ரூ.10 லட்சம் டெபாசிட் தொகையைச் சபைக்கே எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் மின்வாரியத்தில் பணியாற்றியதால் அரசு மூலம் கிடைக்கப்பெறும் பணப்பலன்களைத் தமிழக ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “தமிழக அரசு எங்கள் வாரிசாக இருந்து எங்களை அடக்கம் செய்ய வேண்டும்; எனது திமுக நண்பர்களும், சிஎஸ்ஐ சபையும் இதற்கு உதவ வேண்டும்” என்று அவர் கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதேபோல் ஆலயப் போதகருக்கு அனுப்பிய செய்தியில், “நாங்கள் கர்த்தரிடம் செல்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Cancer PainDomestic TragedyElectricity Board EngineerFamily Suicidetragic incident
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பரங்குன்றத்தில் மதக்கலவர அபாயம் இருந்ததால் 144 தடை விதிக்கப்பட்டதாகக் கலெக்டர் நீதிமன்றத்தில் விளக்கம்!

Next Post

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.