வெட்டாற்றில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பைகளில் மணல் திருடியவர்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் தப்பி ஓடினர்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு அரசு தொடர்பான இடங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது குடவாசல் தாலுக்கா ஆகாசவெளி பகுதியில் பாயக்கூடிய மிகப்பெரிய ஆறான வெட்டாற்றில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பைகளில் மணல் நிரப்பி மணலை திருடுவதற்காக இருசக்கர வாகனத்தோடு சென்று சாக்கு பைகளில் மணலை நிரப்பினார்கள். இதை அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பார்த்தவுடன் உடனடியாக காரை விட்டு இறங்கி சம்பவ இடத்திற்கு காரில் வந்த அதிகாரிகளோடும் ஊழியர்களோடும் வாகன ஓட்டுனரோடும் அங்கு சென்றார் மாவட்ட ஆட்சியரை பார்த்ததும் மணல் திருடர்கள் இருசக்கர வாகனத்தை அங்கு போட்டுவிட்டு தப்பித்து சென்று விட்டார்கள்.
மாவட்ட ஆட்சியர் உடன் வந்த ஊழியர்கள் அதிகாரிகள் மணல் நிரப்பிய சாக்கு முட்டைகளில் இருந்து மணலை ஆற்றிலே கொட்டி விட்டு காவல்துறைக்கு தகவல் அளித்து இருசக்கர வாகனங்களை ஒப்படைத்து விட்டு சென்றார்கள்
குடவாசல் காவல் துறையினர் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்














