கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்- தலைக்கவசம் அணியாமல் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த மாவட்ட எஸ்பி யின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 15ம் தேதி முதல் உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இன்று இருசக்கர வாகனத்தில் இரண்டு ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து,திருக்குறள் புத்தகம் கொடுத்து பாராட்டியதுடன் இரண்டு ஹெல்மெட் அணியாமல் சென்ற குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டவருக்கு ஹெல்மெட் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சிகள் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளி குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்ப்படுத்தி உள்ளது.
பேட்டி: ஸ்டாலின் (கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)













