கன்னியாகுமரி மாவட்டம்: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக ஊழியர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் – இதில் மதுரை மண்டல மேலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஊழியர்களுக்கு உடன்பாடுஎட்டப்படாத நிலையில் தொடர்ந்து ஊழியர்கள் மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன – தொடர்ந்து இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மது பிரியர்கள் அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கும் மது பிரியர்கள் படையெடுப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரண்டாவது நாளாக டாஸ்மாக் கடைகள் மூடல்
டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் அடிப்படை செலவினங்களை மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும், மின் கட்டணங்கள் முழுவதும் அரசை நேரடியாக கட்ட வேண்டும் சரக்கு இறக்கு கூலி நிர்வாகம் ஏற்க வேண்டும், காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்தில் ஏற்படும் கட்டிட வாடகை செலவினங்களை நிர்வாகமே ஏற்க வேண்டும், மதுபான பாட்டில் உடைவு இழப்பீடு தர வேண்டும், காலி அட்டைப்பெட்டி சேதாரக் கழிவு தரவேண்டும், விற்பனைத் தொகை வங்கியில் செலுத்தி செல்லானை மாவட்ட நிர்வாகத்திற்கு தினசரி கொண்டு வருவதற்கு உண்டான செலவினங்களை மற்றும் நிர்வாகம் அலைக்கும் கூட்டத்திற்கு கலந்து கள்ள போக்குவரத்து செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இரண்டாவது நாளாக முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று மதுரை மண்டல மேலாளர் தலைமையில் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் அவதிக்குள்ளான மது பிரியர்கள் அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கும் மது வாங்குவதற்காக மது பிரியர்கள் படையெடுத்து செல்கின்றனர்













