கன்னியாகுமரி மாவட்டம்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்- தெரு நாய் கடியால் சுற்றுலா பயணிகள் அச்சம் – கன்னியாகுமரி நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் முக்கிய சிறப்பான முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கடலில் நீராடுவதற்கும் சூரிய உதயம் நிகழ்வை காண்பதற்கும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டும் பகுதியான திரிவேணி சங்கமும் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் அட்டகாசம் தினசரி நீடித்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அப்பகுதியில் உலா வருகின்றன இதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதுடன் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தெரு நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து தெருநாய்களின் அட்டகாசம் நீடித்தால் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகும் எனவே இதை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.












