கன்னியாகுமரி மாவட்டம்: காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை குலத்தொழிலாக கொண்டவர்கள் கூட காவல்துறையினரின் நெருக்கடியால் பனைத் தொழில் செய்ய தொழிலாளர்கள் அச்சமடைந்து வருவதாக பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது- புதிய தமிழக அரசு இதை முறைப்படுத்தி பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பனைமரம் காக்கும் பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாப்பதற்காக புதிய அரசுக்கு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் குறிப்பாக பதநீர் ஆவின் பாலகத்தில் விற்பனைக்காக பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும், நியாய விலைக் கடைகளில் கருப்பட்டி பனங்கிழங்கு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் அதிக அளவு வாங்கி பயன் பெறுவார்கள் இதனால் மானிய விலையில் பனை சார்ந்த பொருட்கள் கிடைக்கப்பெறும். மேலும் பொதுச்சந்தையில் பனை சார்ந்த பொருட்களின் விலை வேறு தரம் வேறு பணி சார்ந்த பொருட்களை அரசே எடுத்து விற்பனையில் கொண்டு வரும் போது பனை சார்ந்த பொருட்கள் கலப்படமில்லாமல் பொதுமக்கள் கையில் கிடைக்கப் பெறுகின்றனர்.
மேலும் முக்கிய கோரிக்கையான காவல்துறையினர் தொடர் அச்சுறுத்தலால் பனை தொழில் செய்ய பனைத் தொழிலாளர்கள் முன் வர தயங்குகின்றனர். பனைத் தொழிலாளி பதநீர் இறக்கும் போது கள் இறக்குவதாக கூறி பனைத்தொழிலாளிக்கும் காவல்துறையினருக்கும் தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பனைத் தொழிலை குலதொழிலாக செய்து வரும் பனைத் தொழிலாளி கூட தற்போது பனைத் தொழில் செய்ய முன்வர தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பனைத் தொழிலை மேம்படுத்துவதற்காக பனைத் தொழிலுக்கான உரிய அங்கீகாரம் தமிழக அரசு கொடுக்க வேண்டும். பனைத் தொழிலாளிக்கு உரிய அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் பனைத் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். போன்ற பிரதான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளது பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம்.













