விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உதயம்
11, 12ஆம் வகுப்புகள் தொடங்க அரசு அங்கீகாரம் – டாக்டர் கே. மூர்த்தி பெயர்ப் பலகையை திறந்து வைத்து
விழுப்புரம், :
கெடாரில் இயங்கி வரும் பழநிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, நடப்பு கல்வியாண்டான 2026–2027 முதல் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக செயல்படுவதற்கான அரசு அங்கீகார ஆணையை பெற்றுள்ளது.
இதன்படி பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கி நடத்துவதற்கான தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது இதனை தொடர்ந்து) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சியை போற்றும் வகையில், அனுதினமும் அறம் நிறைந்த ஆலோசனைகளை வழங்கி, பள்ளி நிர்வாகத்தினரை வழிநடத்தி வரும் டாக்டர் கே. மூர்த்தி அவர்களிடம், மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கான அரசு அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, “பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி” என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை டாக்டர் கே. மூர்த்தி ஐயா அவர்கள் தனது பொற்கரங்களால் திறந்து வைத்து, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.
பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த மகிழ்ச்சியான தருணம், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடன் முதல்வர் வாசுகி. பள்ளி மேலாளர் மஞ்சுளா. ஐடிஐ முதல்வர் செல்லம்மாள். Hundred Amritsar ராஜேந்திரன், இணை செயலாளர் ஜெயராஜகுமார், செயலாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.













