தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
‘தி பேமிலி மேன்’ என்ற வெப்சீரிஸில் ஹிந்தியில் அறிமுகமாகி, பாலிவுட்டிலும் இடம்பிடித்த சமந்தா, அண்மையில் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸிலும் அசத்தலாக நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது, ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவைப் பற்றி, “கூடுதல் ரேட்டிங் கொடுப்பீர்களா?” என கேட்க, அவர் “10க்கு 10” என தாராளமாக கூறியுள்ளார்.
அதே பேட்டியில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனைப் பற்றி கேட்க, “இதைச் சொன்னால் என்னை கொன்று விடுவார்கள். எனக்கு ஹ்ரித்திக் ரோஷனின் லுக் பெரிதளவில் பிடிக்காது” என தைரியமாக பதிலளித்துள்ளார். அதேசமயம், “10க்கு 7” என ரேட்டிங் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவம் மீண்டும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது