தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப் போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த துவக்க விழாவில், முன்னாள் டி.ஜி.பி., ராஜேந்திரன், தமிழ்நாடு தடகள சங்க ஆலோசகர் லதா ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் வாழ்த்தினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 800 தடகள வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். 18,23 வயதுகுட்பட்டோர் பிரிவுகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டங்கள் மற்றும் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், நடைப்போட்டி, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடக்கிறது.
இன்று துவங்கியுள்ள மாநில அளவிலான இப்போட்டிகள் இரண்டு நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.












