விஜய் டிவியின் மக்கள் மத்தியில் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தற்போது ஜூனியர் சீசன் 10-ஆக ஒளிபரப்பாகி வருகிறது. சிறுவர்கள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாளர்களாக இருந்தது, தொகுப்பாளர்கள் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து நிகழ்ச்சியை நகர்த்தும் விதம், அவர்களின் நகைச்சுவையான பேச்சும், நேர்த்தியான தொகுப்பும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
ஆனால், இந்த வாரம் ரசிகர்களுக்குச் சிறிய அதிர்ச்சி. பிரியங்கா, சமீபத்தில் தனது திருமணத்தை கொண்டாடிய நிலையில், இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால், நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரியங்காவுக்கு பதிலாக, மகாநதி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை லட்சுமி பிரியா, இந்த வாரம் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.
லட்சுமி பிரியா, தனது நடிப்புத் திறமையால் மினி ஸ்கிரீனில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்போது, தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களிடையே மேலும் வரவேற்பைப் பெறுகிறார்.