தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் ‘டெஸ்ட்’ எனும் படத்தில் நடித்திருந்தார். மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியிருந்தார்.
முதலில் திரையரங்குகளில் வெளியாவது என எதிர்பார்க்கப்பட்ட ‘டெஸ்ட்’ திரைப்படம், நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 55 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை பகிர்ந்தனர். இது, படத்தின் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய தகவலின்படி, ‘டெஸ்ட்’ படம் மூலம் நெட்பிளிக்ஸ் தற்போது வரை ரூ. 5 கோடி கூட ஈட்டாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 50 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.
இந்த தகவல் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.