இப்போது நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை அடிப்படையாக கொண்டு தனிநபர் கடன்களை (Personal Loan) விரைவாக வழங்கி வருகின்றன. இது குறுகிய கால நிதித் தேவைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு ஒரு நம்பகமான தீர்வாக இருக்கிறது.
பான் கார்டு ஏன் முக்கியம்?
பான் கார்டு தற்போது முக்கிய KYC ஆவணமாக திகழ்கிறது. கடன் பெறும் போது ஒருவர் எத்தகைய நிதித் தகுதியுடன் இருக்கிறார், அவரின் கடன் வரலாறு என்ன என்பவற்றை மதிப்பீடு செய்ய பான் கார்டே முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், வங்கிகள் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
கடன் பெற தேவையான ஆவணங்கள்:
- அடையாள சான்று: ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அட்டை.
- முகவரி சான்று: ஆதார், பாஸ்போர்ட், உரிமம் முதலியவை.
- பண வரவு சான்றுகள்: கடந்த 3 மாத வங்கி statement மற்றும் சமீபத்திய சம்பள சான்றிதழ் அல்லது Form 16.
பான் கார்டு லோனின் சிறப்பம்சங்கள்:
- விரைவான ஒப்புதல்: அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், 24 மணி நேரத்திற்குள் கடன் ஒப்புதல் கிடைக்கலாம்.
- எளிய விண்ணப்ப செயல்முறை: ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இ-கேஒய்சி செயல்முறை மூலம் விரைவில் முடிக்கலாம்.
- போட்டி வட்டி விகிதங்கள்: பல NBFC நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன.
- குறைந்த ஆவணங்கள்: பான் மற்றும் ஆதார் கார்டு போதும்.
- நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதி: உங்கள் வசதிக்கு ஏற்ப தொகை மற்றும் காலத்தைக் தேர்ந்தெடுத்து கடனை திருப்பிச் செலுத்தலாம்.
யார் தகுதி பெறுகிறார்கள்?
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- வயது 21 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
- நிலையான வருமானம் மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்.
மோசடிகளிலிருந்து பாதுகாப்பு எப்படி?
இந்த வேகமான செயல்முறைதான் பல மோசடிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது. அதனால், கடன் பெறும் முன் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்றுங்கள்:
- RBI அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களையே தேர்வுசெய்யவும்.
- கேள்விப்படும் லோன் அப்ளிகேஷன்களில் விண்ணப்பிக்க வேண்டாம்.
- அதீத வட்டி விகிதங்கள் உள்ள நிறுவனங்களைத் தவிர்க்கவும்.
- ஆன்லைன் ரிவ்யூ மற்றும் நிறுவனத்தின் தளத்தை நன்கு ஆராய்ந்து பார்வையிடுங்கள்.
பான் கார்டு வழியாக கடன் பெறுவது மிக எளிதானதாக மாறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இது மிகுந்த கவனமும் தேவைப்படும் செயலாகவும் உள்ளது. உங்கள் நிதி நிலைக்கு ஏற்றவாறு, நம்பகமான வழியிலேயே கடன் பெறுவதே பாதுகாப்பானது.