September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சி

by Satheesa
September 10, 2026
in News
A A
0
ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பழைய எண்ணெய் கிணற்றில் விரிவான விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு:- சைடு ட்ராக்கிங் முறையில் பக்கவாட்டில் குழாய் அமைத்து ஒன்றரை கிலோ மீட்டருக்கு பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பல்வேறு இடங்களில் எண்ணெய்- எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளது. இவற்றில் பல கிணறுகளில் எண்ணெய்- எரிவாயு வளம் குறைந்து விட்டதால், கைவிடப்பட்ட கிணறுகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக எந்த எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணியும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில முயற்சிகளையும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பழைய எண்ணெய் எரிவாயு கிணறான Kut-9 என்ற கிணற்றில் மீண்டும் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி முயற்சிப்பதாகவும், இதற்காக மிகப்பெரிய ராட்சத குழாய்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜகோபாலபுரம் கிராமத்துக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி கிணற்றை அண்மையில் பார்வையிட்டனர். இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒத்த கருத்துடைய பிற அமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ‘KUT-9’ பழைய எண்ணெய் கிணற்றில் எவ்வித உரிய அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக விரிவான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றம் சாட்டி
​பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்
​
பழைய எண்ணெய்கிணறு வளாகத்தில் ஆயிரக்கணக்கான குழாய்கள் குவிக்கப்பட்டு, ‘Rig’ இயந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது வழக்கமான பராமரிப்புப் பணி போல் இல்லாமல், புதிய விரிவான திட்டமாக நடைபெறுகிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அனுமதி எதுவும் பெறாமல், ‘Side Tracking’ மூலம் பக்கவாட்டுக் கிணறுகள் அமைக்கும் முயற்சி நடப்பதாகவும்,
காவிரிப் படுகையைப் பாதுகாக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் – 2020-ஐ நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பழைய கிணறு என்ற பெயரில் புதிய விரிவாக்கப் பணிகளை ஓ.என்.ஜி.சி முன்னெடுப்பதாகத் குற்றம் சாட்டினார்.
​​விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
​சம்பந்தப்பட்ட திட்ட ஆவணங்களை அதிகாரிகள் முழுமையாகப் பரிசீலித்து, சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும் அதன் நகல்களை வழங்க வேண்டும்.
​மக்கள் போராட்டம் வெடிப்பதற்குள் மாவட்ட ஆட்சியர் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டி பேராசிரியர் தா ஜெயராமன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

PM.மெட்டீரியல் ராகுல்காந்தி CM.மெட்டீரியல் முதலமைச்சர் விஜய் என்று MP.சுதா செய்தியாளர்க்கு பதில்

Next Post

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சனை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
PM.மெட்டீரியல் ராகுல்காந்தி CM.மெட்டீரியல் முதலமைச்சர் விஜய் என்று MP.சுதா செய்தியாளர்க்கு பதில்

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.