வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், குளத்தின் கரையை பலப்படுத்தியதால் தன்மீது மண் எடுத்ததாக 13 லட்சம் அபராதம் விதித்த நிலையில் விசாரணை செய்ய மேல்முறையீடு செய்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயி ஒருவரின் குமுறலுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாப்படுகையை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதிகாரிக்ள கண்டு கொள்ளவில்லை என்று கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார். அவர் பேசுகையில் வண்டல் மண் எடுப்பதில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சாதாரண விவசாயிக்கு அனுமதி தராமல், அரசியல் செல்வாக்குள்ள நபர்களுக்கு அனுமதி தந்து, அவர்கள் லாரிகளில் வந்து அதிக அளவில் மண்ணை அள்ளிச் செல்கிறார்கள். ஒரு தாசில்தார் இதுபோன்ற முறைகேடான காரியங்களுக்கு அனுமதி கொடுத்தால், அது நீர்நிலைகளைப் பாதிக்கும் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டினார். நாராயணபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒருதலை ராகம் திரைப்பட பாடல்’ படம் பிடிக்கப்பட்டது. அந்த குளத்தை தனிநபர் ஒருவர் ஆக்ரமித்து தூர்த்து கரையை சேதப்படுத்தியதை தடுத்து நிறுத்தி கரையை கட்டியதற்காக தன்மீது பொய் புகார் அளித்து குளம் இல்லாத இடத்தில் நான் மண் எடுத்ததாக எனக்கு வருவாய்துறையினர் 13 லட்சம் அபராதம் விதித்தனர். இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 4 முறை விசாரணை கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்தும் இதுவரை விசாரணை செய்யாதது ஏன் என்று விவசாயி ராமலிங்கம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். கணிமவளத்துறையினரை கூப்பிட்டு ஏன் மனுவை விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .













