மயிலாடுதுறையில் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்; கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி0கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஏ.வி.சி. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம், நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த 300க்குகம் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது முக்கிய வீதிகளை வழியாக சென்று மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும், கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, துணைக்காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல்பிரிவு) ஜெயராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.













