கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேருராட்சி 2வது வார்டு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு தெற்றிவிளை – குறு சாலை ஓரம் பிளாஸ்டிக் கழிவுகள்,நாப்கின், இறைச்சி கழிவுகள்
சமூக விரோதிகள் கொட்டி செல்வதால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது இதனால் இந்த பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் மேலும் இந்த பகுதி மது பிரியர்கள் கூடாரமாகவும் மாறி வருகிறது மது பிரியர்கள் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை சாலையில் வீசி உடைத்து செல்கின்றனர் மேலும் இதனால் இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது இது குறித்து அருமனை பேருராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்













