பொதுமக்களே அனைவரும் வாருங்கள் காவிரி ஆற்றை சுத்தம் செய்வோம். குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம்…
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் மெகா தூய்மை பணி துவக்கம் , ஐந்துக்கும் மேற்பட்ட ஜே சி பி இயந்திரங்களைக் கொண்டு தூய்மை பணியில் இறங்கியுள்ள தூய்மை மயிலாடுதுறை அமைப்பினருக்கு குவியும் பாராட்டு :-
மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள காவேரியில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் முழுவதுமாக மாசற்று காணப்பட்டது. இதனை சுத்தம் செய்யும் முயற்சியில் தூய்மை மயிலாடுதுறை என்ற அமைப்பினர் பொதுப்பணித்துறையில் அனுமதி பெற்று ஒரு மாதத்திற்கும் மேலாக துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி துலா கட்டம் , சித்தர்காடு , மூவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் அளித்த நிதியை பயன்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் 20 கிலோமீட்டர் தூரம் தூர்வாரி வருகின்றனர். தற்போது காவிரியில் தண்ணீர் இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து காவிரி துலா கட்ட முதல் தருமபுரம் பகுதி வரை மெகா சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. ஐந்துக்கும் மேற்பட்ட ஜே சி பி இயந்திரம் மூலம் இரண்டாம் கட்ட தூய்மை பணியை துவங்கி உள்ளனர். ஏறத்தாழ 20கிலோமீட்டர் தூரம் காவிரி ஆற்றில் உள்ள குப்பைகள் மற்றும் புதர் மண்டிய பகுதிகள் இதன் மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ஜே சி பி இயந்திரம் மற்றும் அதற்கான டீசல் டிரைவர் சம்பளம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். மேலும் இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். தூய்மை மயிலாடுதுறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோதி கூறுகையில்,தற்போது உள்ள சூழ்நிலையில் எள்ளி னோ தாக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக தாக்கி வருகிறது. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இதில் காவிரியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும் இறைச்சிகளின் கழிவுகளையும் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தில் தண்ணீர் ஊடுருவி செல்ல முடியாமல் தேங்கி காவிரி காய்ந்து வருகிறது. இதனால் பூமிக்கு தண்ணீர் போக தடை ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும் இறைச்சிக்கழிவுகளையும் காவிரி ஆற்றுப்படுகையில் கொட்ட வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். டெல்டா மாவட்டத்தில் காவிரி ஆறு மிகவும் பெரிதும் பங்கு வைக்கிறது. இந்த பகுதியில் விவசாயிகள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஆகையால் காவிரியை அசுத்த படுத்தாமல் தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.














