குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு அம்மன் அருள் வந்து ஆடிய பக்தர்கள் பச்சிளம் குழந்தைகளை தலைமேல் தூக்கி வைத்து ஆடி தீயில் கொதிக்கும் மஞ்சள் நீரை உடலில் தெளித்து பக்தி பரவசமடைய செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 29 ம் தேதி துவங்கி பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து அம்மன் அருள் வந்து ஆடிய இரண்டு பெண் பக்தர்கள் பச்சிளம் குழந்தைகளை தலைமேல் தூக்கி வைத்து ஆடியோதோடு கொதிக்கும் மஞ்சள் நீரை உடலில் தெளித்து பக்தர்களை பரவசமடைய செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்














