March 31, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

by Priscilla
May 9, 2025
in Sports
A A
0
தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டம், தர்மசாலாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியுடன் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்திய ராணுவம் தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் முக்கிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பதான்கோட்டியில் நிகழ்ந்த வான் வெளி தாக்குதல்களால், அதனுடன் அருகிலேயே — சுமார் 90 கிமீ தூரத்தில் — அமைந்த தர்மசாலா மைதானத்தில் போட்டி நடத்துவது குறித்து பலரிடையே அவசரமான கேள்விகள் எழுந்தன. இணையவழி கோரிக்கைகள், “வீரர்களும் ரசிகர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே!” என வலியுறுத்தின.

ஆனால், போட்டி திட்டமிட்டபடியே ஆரம்பமானது. முதலில் மழையால் டாஸ் தாமதமானது. பின்பு டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைதானத்தின் இரு கோபுர விளக்குகள் திடீரென அணைந்தன.

இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், விளக்குகள் பாதுகாப்பு காரணமாகவே அணைக்கப்பட்டதென அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தது. உடனடியாக வீரர்கள், நடுவர்கள் மற்றும் மைதானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டி ஒழுக்கமாக ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட்டபடி வெளியே சென்றனர்.

போட்டியை நிறுத்தியதற்கு காரணம் என்ன ?

தர்மசாலா கிரிக்கெட் சங்கமே போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணமாக தர்மசாலா அருகிலுள்ள காகர், காங்க்ரா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வீரர்கள் எப்படி அப்பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

BCCI அவசர ஆலோசனை – IPL தொடருக்கு என்ன நடக்கும் ?

இந்நிலையில், பிசிசிஐ சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “நிலவரம் கடுமையானது. வீரர்களின் பாதுகாப்பு எங்கள் முக்கியக் கவலையா உள்ளது. ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பதையும் அரசு ஆலோசனைகளையும் கவனித்து முடிவு எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

வந்தேபாரத் ரயில் ஏற்பாடு – பாதுகாப்பு முதன்மை!

இந்நிலையில், பிசிசிஐ இரு அணிகளின் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்புப் பணியாளர்களுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயிலை ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 300 பேரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் இந்த ரயிலின் நேரமும், வழித்தடமும் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: BCCICRICKETIPLsports players
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோமாதாவின் மதிப்பும் ஆன்மிகச் சிறப்பும்

Next Post

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
வேப்பனஹள்ளியில் திமுகவிற்கு பின்னடைவு: கே.பி.முனுசாமி முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

வேப்பனஹள்ளியில் திமுகவிற்கு பின்னடைவு: கே.பி.முனுசாமி முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

January 18, 2026
ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

January 16, 2026
ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

January 5, 2026
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.