சீர்காழி அருகே மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காரைமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்களின் கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான இ-பட்டாக்களையும், வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா 14 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில், 32 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இறப்பு உதவித்தொகை, இந்திரகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை ஆகியவை ரூ.2 இலட்சத்து 40 ஆயிரத்து 400 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.100 மதிப்பிலான காய்கறி விதைத் தொகுப்பினையும், குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகன்,சீர்காழி வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்















