மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒரே இடத்தில் திரண்டு ஆர்வத்துடன் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆறுபாதி பகுதியில் தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும், தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகாசன போட்டிகள் இன்று நடைபெற்றது. உலக சிலம்ப விளையாட்டு சங்க மாநில செயலாளர் விநாயகம் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு புதுச்சேரி கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். அலங்கார சிலம்பம் மற்றும் தொடுசிலம்பம் என்ற இரண்டு முறைகளிலும், கராத்தேவில் பயிற்சி மற்றும் சண்டை ஆகிய இரண்டு முறைகளிலும் போட்டிகள் நடைபெற்றது. ஆறு வயது முதல் 14 வயது 17 வயது 19 வயது ஆகிய பிரிவுகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.













