மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில், நடைபெற்ற இலக்கிய மன்றம் துவக்க விழாவில் யோகாசனத்துடன் கூடிய நடன நிகழ்ச்சி, இசைக்கு ஏற்ப சிலம்பம் ஆடிய மாணவிகள், ஏழாம் வகுப்பு மாணவனின் தமிழ் இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது ஆண்டு இலக்கிய மன்ற விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் புரவலரும், தருமை ஆதின 27-வது மடாதிபதியுமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் விழா நடைபெற்றது. 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மன்ற மாணவ பொறுப்பாளர்கள் பங்கேற்று கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏழாம் வகுப்பு மாணவன் விஷ்வா என்பவரது தவில் இன்னிசை கச்சேரி, இசையுடன் கூடிய யோகா நிகழ்ச்சி, பிரமிடு வடிவில் நின்ற மாணவிகள், மற்றும் பாரம்பரியமான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, இசைக்கு ஏற்ப நடைபெற்ற சிலம்பாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

















