தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன்-காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு. ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞரின் தரப்பினர் குற்றச்சாட்டு. பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினி (16). இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சேர உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரிய வர இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நடந்துள்ளது. பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் நேற்று பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இரவு சுமார் மூன்று மணி அளவில் இருவரும் சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர். இச்சம்பவத்தை அந்த பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ADSPசுரேஷ், DSP சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கே இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து இருவரையும் பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவமணை மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர். பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக இளைஞர்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் வாகனங்கள் மற்றும் வீட்டை எதிர்தரப்பினர் உடைத்து சேதப்படுத்தி சென்று உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

















