2025-ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா போல் நடந்துவரும் நிலையில், போட்டி இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், சில வீரர்கள் சற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில் இருக்கின்றனர். பெரும் பணத்தில் ஏலம் எடுக்கப்பட்டும், அவர்கள் ஆட்டத்தில் தாக்கம் செலுத்தாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தருணத்தில், ஐஸ்லாந்து கிரிக்கெட் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான அணியை வெளியிட்டுள்ளது — ‘ஐபிஎல் ஃப்ராடு XI’. இந்த அணியில் 2025 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (கேப்டன்) வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, பதிரானா, முகம்மது ஷமி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய 11 வீரர்களை தேர்வு செய்து ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ என்ற அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் உருவாக்கி இருக்கிறது.
இம்பேக் பிளேயர்: முகேஷ் குமார்
இந்த அணியின் நோக்கம், இந்த சீசனில் குறைந்த அளவு பங்களிப்பு வழங்கிய வீரர்களை சுட்டிக்காட்டுவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது கலகலப்பாகும் விவாதமாக மாறி வருகிறது.