மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைன் நாடு ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக மாஸ்கோவிலுள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மே 8 முதல் 10 வரை 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உக்ரைன் அதனை ஏற்க மறுத்ததோடு, மாறாக ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியது.
இந்த தாக்குதலாலல், குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். வோரோனெஸ் மாகாணத்தில் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளிலும் விமான சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
போருக்கு முடிவுகாண பேச்சுவார்த்தைகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலில் நடைபெற்று வருவதும், ஆனால் ரஷ்யா விதித்த நிபந்தனைகளை உக்ரைன் ஏற்காததால் இவை முற்றிலும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளன.