June 6, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – செல்வப் பெருந்தகை

by gowtham
June 7, 2025
in News
A A
0
தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – செல்வப் பெருந்தகை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பா.ஜ.காலும் வேறு மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல நடத்துவதில்லை. எல்லோரும் பயம் காட்டுகிறார்கள் எனக் கூறுகிறார்கள்.. மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்காகத்தான் இந்த முருகன் மாநாடு போன்றவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத் துறை சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் நடத்த வேண்டிய தேவை இப்போது என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் இவர்களுடைய மாநாட்டை குஜராத் உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தலாமே?. அதுதான் சமத்துவம்.. அதுதான் கடவுளை சமமாக பார்க்கிறோம் என்ற செய்தியாக இருக்கும். ஆனால் அரசியல் செய்து மக்களை அச்சத்தில் வைத்து இருக்கிறார்கள். இது வட மாநிலங்களில் எப்படி கலவரத்தை தோண்டினார்களோ அதே போன்று தென் மாநிலங்களிலும் தூண்ட நினைக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் முதல்வர்களை அழைத்து மறு சீரமைப்பு குறித்து, என்ன ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். தென்மாநிலங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பா.ஜ.க இறங்கி இருக்கிறது..
நாடாளுமன்றத்தில் எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றன, ஆயிரம் இருக்கைகள் போட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. ஆயிரம் இருக்கைகள் போட்டு இருக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?.. இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தெரியவில்லை, முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியவில்லை. வராததை வருகிறது என பூச்சாண்டி காட்டுவதாக எடப்பாடி செல்கிறாரே.. ஆயிரம் இருக்கைகள் எதற்காக போட்டு இருக்கிறார்கள்? காரணம் என்ன?. ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவா?.. 545-க்கு பதில் ஆயிரம் என்றால், தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் எங்கு இருக்கும்.. இப்பொழுது நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை. ஆயிரம் வந்து விட்டால் இரண்டு நிமிடம் கூட தமிழ்நாடு சார்பாக பேச கிடைக்காது. இதையெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரிதல் இல்லையா ? இல்லை புரிந்து கொண்டு இப்படி பேசுகிறாரா ? என தெரியவில்லை. நிச்சயம் பா.ஜ.க இப்படித் தான் பேசுவார்கள். அவர்களுடைய வேலை திட்டமே மக்களை திசை திருப்புவது தான். மக்களுக்கு உண்மைக்கு புறமான செய்திகளை கொடுப்பது. நாங்கள் தெளிவாக சொல்கிறோம் மறு சீரமைப்பு என்பது, பா.ஜ.க திட்டமிட்டது போல் நடந்தால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். தென்னிந்தியா பாதிக்கப்படும். வடமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தே தீர்மானித்து விடுவார்கள்.

நாங்கள் உடனே நடத்துங்கள் என்று கூறுகிறோம் நாங்கள் எதையும் திசை திருப்பவில்லை. எதற்கு ஓராண்டு இரண்டு தள்ளி போடுகிறீர்கள். மத்திய அரசிடம் தான் புள்ளியியல் துறை இருக்கிறது. மாநில அரசு சென்சஸ் நடத்தலாம் சர்வே நடத்த முடியாது. இதை நிச்சய மத்திய அரசு உடனே நடத்த வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகத் தான் கர்நாடக அரசு கமிஷனரை தற்காலிக பணி நீக்கம் செய்து இடமாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் முதல்வர் சித்தராமய்யாவின் செயலாளரையே மாற்றி இருக்கிறார்கள். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏதாவது ? குழப்பம் செய்யலாமா என சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஒரு போதும் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தமிழ் மண்ணில் இடம் இல்லை.

யாரும் சண்டை போடவில்லை, எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம். எங்களுடைய உரிமை தொகையை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஜி.எஸ்.டி செலுத்துவதில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எங்களுடைய உரிமை தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடர் பாதிப்பு வந்த மாநிலத்திற்கு கொடுக்காமல் வராத மாநிலத்திற்கு கொடுக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய 2000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறீர்கள். இது போன்ற உரிமை கேள்வியை மட்டும் தான் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கு அவர்கள் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள் மாண்புமிகு முதல்வர் இதை கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார் என நினைக்கிறார்களா?..
ஒன்றிய அமைச்சர் முருகன் பதவிக்கு வந்தார், தமிழ்நாட்டிற்கு தேவையானவைகளை அவர் தானே பேசி பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கேட்பதில்லை. பா.ஜ.க தலைவர்கள் ஏன் ? தமிழ்நாட்டில் நலனுக்காக குரல் கொடுப்பது இல்லை?. இதுதான் பா.ஜ.க விற்கு மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என தெரிவித்தார்.

Tags: congressmk stalinselvaperundhaitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. இந்தியா பிளானிங் என்ன.. ?

Next Post

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் – அன்பழகன்

Related Posts

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.
News

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி
News

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 
News

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு
News

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026
Next Post
தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் –   அன்பழகன்

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் - அன்பழகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

0
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

0
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

0
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Recent News

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.