மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று சிறையில் உள்ள தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் தடுப்பு சட்டம்;-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆலவேலி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(31) இவர் அதே பகுதியை சேர்ந்த கவிப்பிரியா(25) என்பவரை காதலித்து 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கவிப்பிரியாவுக்கு தனியார் வங்கியில் சுயஉதவிக்குழு பணம் வசூல் செய்யும் அரிவேளூரை சேர்ந்த அபினேஷ்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் ஆக்கூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி கவிப்பிரியா தனது 3 வயது ஆண் குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்து, தலையில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 30-ஆம் தேதி உயிரிழந்தது.
இந்நிலையில் கவிப்பிரியாவின் கணவர் கனிவண்ணன் தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு காயமடைந்து இறந்தது தெரியவந்தது.
அதனையடுத்து செம்பனார்கோவில் போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்து அபினேஷ், கவிப்பிரியா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குழந்தையை கொலை செய்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சினேஹாபிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அபினேஷ், கவிப்பிரியா இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து போலீஸார் அபினேஷ்சை(29 கடலூர் மத்திய சிறையிலும், கவிப்பிரியாவை சிருச்சி மகளிர் தனிச்சிறையிலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். .















