தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் நடிகர் மகேஷ் பாபு.இவர் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார்.
இந்த நிறுவனங்கள் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும், தகுதியில்லாத நிலங்களை விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்துகையில் இதன் விளம்பர தூதராக நடிகர் மகேஷ் பாபு இருப்பது தெரியவந்தது.
அவர், இதற்காக சுமார் 5.9 கோடி ரூபாயை அவர் பெற்றுள்ளதாகவும், இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தெலங்கானா மாநிலத்தில் சுரானா நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சதிஷ் சந்திர குப்தா மற்றும் பலருக்கு எதிராக பதிவான புகார்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த பணத்தை மோசடி மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தநிலையில், மகேஷ் பாபுவுக்கு தற்போது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மகேஷ்பாபு வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.