சென்னை: திமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலியும், சளி தொற்றும் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, இதயத்துறை, குடல் மற்றும் இரைப்பை நலன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்கினர்.
சிகிச்சைக்கு ஒத்துழைத்த அவரது உடல்நிலை தற்போது சீரடைந்த நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.