திருச்சி மாவட்டம், அல்லூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில், முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின், மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:
திருச்சி மாவட்டம், அல்லுாரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட கற்கோவில் உள்ளது. இதில், 14 கல்வெட்டுகளை, எங்கள் துறையை சேர்ந்த, ஆய்வாளர் சாருமதி கண்டறிந்து படியெடுத்துள்ளார். அதில் ஒரு கல்வெட்டு மிகவும் சிதிலமடைந்து உள்ளது.
10ம் நுாற்றாண்டு எழுத்துருவில், முதலாம் பராந்தக சோழனின் 26வது ஆட்சியாண்டில், கோவிலுக்காக, திருவாதகுடியில் உள்ள நிலத்தை, வீரசோழ இளங்கோவன் என்பவர், தானமளித்த தகவல் உள்ளது என்று கூறினார்.