ஷாங்காய் (சீனா): ஷாங்காயில் உள்ள பிரபல மால்களில் ஒன்றில், வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த மாலில் தற்போது ஒரு தனித்துவமான தங்க உருக்கும் ஏடிஎம் (Gold ATM) செயல்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎம் சாதாரணமானது அல்ல – நீங்கள் உங்கள் தங்கத்தை இதில் இடும் போது, அது 1,200 டிகிரி செல்சியஸில் உருக்கப்பட்டு, அதன் விலைக்கு ஏற்ப நேரடியாக பணமாக மாற்றி தருகிறது! இது தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய தேவையை நீக்கி, நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அதிசய சேவையாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தங்கத்தின் விலை தற்போது உலகளவில் உச்சத்தில் இருப்பதால், தங்கத்தை பணமாக்கும் தேவையும் அதிகரித்துள்ளது. இதை மனதில் வைத்து சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வசதியை உருவாக்கியுள்ளன.
இதே நேரத்தில், இந்த கண்டுபிடிப்பை பார்த்த ஒரு இந்தியர் தனது X கணக்கில்,
“இந்த மாதிரியான தங்க ஏடிஎம் இந்தியாவிலும் விரைவில் வந்தால், அது மக்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!“
என்று பதிவு செய்துள்ளார்.
A gold ATM in Shanghai, China
— Tansu Yegen (@TansuYegen) April 19, 2025
It melts the gold and transfers the amount corresponding to its weight to your bank account.
pic.twitter.com/hFu3AjqEo2
இந்தியாவில் இது எப்போது வருமோ?
இந்த இயந்திரம் சீனாவில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருப்பதால், இது இந்தியாவிலும் அறிமுகமாகும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குறைந்த கட்டணத்தில், தங்கம் உருக்கி நேரடி பணமாக மாற்றும் இந்த சேவை, எதிர்கால நகை வணிகத்திலும் பெரிய புரட்சியைக் கொண்டு வரும் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.