கந்திலி அருகே காணமல் போன இளம் பெண் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தயார் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி!. அரசு மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி தம்மன் வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி கீதா(40) என்பவருக்கு திருமணமாகி மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது மகள் மோனிஷா (18) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில்லிருந்து மோனிஷா வெளியேறியுள்ளார்.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காததால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் போலீசார் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் மன உளச்சலில் இருந்த கீதா வீட்டில் நிலத்திற்காக அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்திவிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.இதனை அறிந்த உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மகள் காணவில்லை எனவும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலிசாரால் தாய் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…














