சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் மேகக் கூட்டம் போல் புகை பரவி வரும் கழுகுப் பார்வை காட்சி.
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளாறு வருவதாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவக விடுதி உள்ளிட்டவைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு வந்து தான் கொட்டி தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் குவியல் குவியலாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எதிர்பாராமல் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ மல மலவென அனைத்து பகுதிகளிலும் எரியத் தொடங்கியது. இதனால் இந்த குப்பை கிடங்கு அருகில் உள்ள கோவிந்தராஜ் நகர், ஈசானிய தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல, சர்க்கார் தெரு ,கோயில் சேர்த்தி, கே பி எஸ் நகர், அருந்ததி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களாக புகை மூட்டத்தால் மூச்சு திணறி கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பொறியாளர் மார்க்கோனி தலைமையில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளர் செந்தில்குமார், மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் குப்பை கிடங்கிற்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர் அப்பொழுது நகராட்சி ஆணையர் சசிகுமார் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீர்காழி – புளிச்சக்காடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தின் போது மூன்று நாட்களாக எரியும் குப்பையை அணைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தர வேண்டும், குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரியும் தீயை முழுமையாக அணைக்க வேண்டும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆணையர் சசிகுமார் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்பொழுது கூடுதல் தீயணைப்பு நிலைய வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி ஆகியவற்றை கொண்டு வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பெயரில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி -புளிச்சக்காடு இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

















