கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து திருவாரூர் அருகே கூட்டுறவு சங்கம் முன்பு அதிமுக சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் விவசாயிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.













