திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் நீண்ட காலமாக வலுவிழந்து ஆடி வந்த சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்து விபத்து – வாகன ஓட்டி படுகாயம்.
திருவாரூர் நகரில் வாகன போக்குவரத்து நெருக்கடியை தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன போக்குவரத்தினை சீரமைத்து வருகின்றனர். இதில் சில இடங்களில் எச்சரிக்கை சிவப்பு விளக்குகள் மட்டும் உள்ள சிக்னல் கம்பங்கள் சூரிய மின் சக்தியில் இயங்கி வருகின்றன.
அதேபோல் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் சூரிய மின் சக்தியில் இயக்க கூடிய எச்சரிக்கை சிவப்பு விளக்கு கொண்ட சிக்னல் கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பம் சிறிது காலமாக வலுவிழந்து காற்றில் ஆட்டம் கண்டு வந்துள்ளது.
இது குறித்து அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு பலமாக வீசிய காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திடீரென சிக்னல் கம்பம் ரோட்டில் சாய்ந்து விழுந்தது, இந்த சமயத்தில் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்ற திருவாரூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது விழுந்துள்ளது.
அதில் வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததில் தலையில் காயமடைந்த வாலியர் மயக்க நிலைக்கு சென்றார். அவரை அருகில் ஆட்டோ ஸ்டெண்டில் இருந்த டிரைவர்கள் ஒடி வந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த நேரத்திலும் பரபரப்பாக பேருந்து இரு சக்கர வாகனங்கள் என மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையம் முகப்பில் சிக்னல் கம்பம் நீண்ட காலமாக வலுவிழுந்து ஆடி வந்த நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வேதனைக்குரியது.
சிக்னல் கம்பம் விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் தலையில் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளது குறிப்பிடதக்கது.
எனவே அனைத்து இடங்களில் வைக்கப்பட்ட சிக்னல் கம்பங்களின் உறுதி தண்மையை ஆய்வு செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













