நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாடாளு மன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.அப்போதே மது போதைகள் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அலப்பறையில் ஈடுபட்டார் அப்போது காவல்துறையினர் பிடித்து இழுத்துச் சென்று அடித்து இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது













