October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – செல்வப் பெருந்தகை

by gowtham
June 7, 2025
in News
A A
0
தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – செல்வப் பெருந்தகை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பா.ஜ.காலும் வேறு மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல நடத்துவதில்லை. எல்லோரும் பயம் காட்டுகிறார்கள் எனக் கூறுகிறார்கள்.. மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்காகத்தான் இந்த முருகன் மாநாடு போன்றவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத் துறை சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் நடத்த வேண்டிய தேவை இப்போது என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் இவர்களுடைய மாநாட்டை குஜராத் உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தலாமே?. அதுதான் சமத்துவம்.. அதுதான் கடவுளை சமமாக பார்க்கிறோம் என்ற செய்தியாக இருக்கும். ஆனால் அரசியல் செய்து மக்களை அச்சத்தில் வைத்து இருக்கிறார்கள். இது வட மாநிலங்களில் எப்படி கலவரத்தை தோண்டினார்களோ அதே போன்று தென் மாநிலங்களிலும் தூண்ட நினைக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் முதல்வர்களை அழைத்து மறு சீரமைப்பு குறித்து, என்ன ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். தென்மாநிலங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பா.ஜ.க இறங்கி இருக்கிறது..
நாடாளுமன்றத்தில் எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றன, ஆயிரம் இருக்கைகள் போட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. ஆயிரம் இருக்கைகள் போட்டு இருக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?.. இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தெரியவில்லை, முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியவில்லை. வராததை வருகிறது என பூச்சாண்டி காட்டுவதாக எடப்பாடி செல்கிறாரே.. ஆயிரம் இருக்கைகள் எதற்காக போட்டு இருக்கிறார்கள்? காரணம் என்ன?. ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவா?.. 545-க்கு பதில் ஆயிரம் என்றால், தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் எங்கு இருக்கும்.. இப்பொழுது நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை. ஆயிரம் வந்து விட்டால் இரண்டு நிமிடம் கூட தமிழ்நாடு சார்பாக பேச கிடைக்காது. இதையெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரிதல் இல்லையா ? இல்லை புரிந்து கொண்டு இப்படி பேசுகிறாரா ? என தெரியவில்லை. நிச்சயம் பா.ஜ.க இப்படித் தான் பேசுவார்கள். அவர்களுடைய வேலை திட்டமே மக்களை திசை திருப்புவது தான். மக்களுக்கு உண்மைக்கு புறமான செய்திகளை கொடுப்பது. நாங்கள் தெளிவாக சொல்கிறோம் மறு சீரமைப்பு என்பது, பா.ஜ.க திட்டமிட்டது போல் நடந்தால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். தென்னிந்தியா பாதிக்கப்படும். வடமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தே தீர்மானித்து விடுவார்கள்.

நாங்கள் உடனே நடத்துங்கள் என்று கூறுகிறோம் நாங்கள் எதையும் திசை திருப்பவில்லை. எதற்கு ஓராண்டு இரண்டு தள்ளி போடுகிறீர்கள். மத்திய அரசிடம் தான் புள்ளியியல் துறை இருக்கிறது. மாநில அரசு சென்சஸ் நடத்தலாம் சர்வே நடத்த முடியாது. இதை நிச்சய மத்திய அரசு உடனே நடத்த வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகத் தான் கர்நாடக அரசு கமிஷனரை தற்காலிக பணி நீக்கம் செய்து இடமாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் முதல்வர் சித்தராமய்யாவின் செயலாளரையே மாற்றி இருக்கிறார்கள். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏதாவது ? குழப்பம் செய்யலாமா என சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஒரு போதும் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தமிழ் மண்ணில் இடம் இல்லை.

யாரும் சண்டை போடவில்லை, எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம். எங்களுடைய உரிமை தொகையை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஜி.எஸ்.டி செலுத்துவதில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எங்களுடைய உரிமை தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடர் பாதிப்பு வந்த மாநிலத்திற்கு கொடுக்காமல் வராத மாநிலத்திற்கு கொடுக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய 2000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறீர்கள். இது போன்ற உரிமை கேள்வியை மட்டும் தான் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கு அவர்கள் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள் மாண்புமிகு முதல்வர் இதை கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார் என நினைக்கிறார்களா?..
ஒன்றிய அமைச்சர் முருகன் பதவிக்கு வந்தார், தமிழ்நாட்டிற்கு தேவையானவைகளை அவர் தானே பேசி பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கேட்பதில்லை. பா.ஜ.க தலைவர்கள் ஏன் ? தமிழ்நாட்டில் நலனுக்காக குரல் கொடுப்பது இல்லை?. இதுதான் பா.ஜ.க விற்கு மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என தெரிவித்தார்.

Tags: congressmk stalinselvaperundhaitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. இந்தியா பிளானிங் என்ன.. ?

Next Post

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் – அன்பழகன்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

October 15, 2025
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது
News

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

October 14, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !
News

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !
News

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

October 14, 2025
Next Post
தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் –   அன்பழகன்

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவதை நாராயணசாமி மாற்றிக்கொள்ள வேண்டும் - அன்பழகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

0
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

0
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

0
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

October 15, 2025
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

October 14, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

October 14, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

October 15, 2025
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

October 14, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.