“2 பேர் தூக்கிட்டு வராங்க.. கடன் எப்படி கட்டுவ?” – என்று மாற்றுத்திறனாளியான தன்னை வங்கி வங்கி மேலாளர் கடன் தராமல் 1 வருடமாக அலைக்கழிப்பதாக கண்ணீருடன் குற்றசாட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி. இவரது குடும்பத்தில் உள்ள சித்தி, அண்ணன் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். பாலாஜி தனது வாழ்வாதாரத்திற்காகக் கால்நடைத் தீவனம் / மேட் தயாரிக்கும் தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அரசு மானியத்துடன் கூடிய 30 லட்சம் வங்கிக் கடன் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடமாக குத்தாலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கடன் தராமல் அலைக்கழித்து வந்துள்ளதாக மாற்றுத்’திறனாளி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். .
கடன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், லஞ்சம் கேட்பதாகவும் மேலும், “உன்னை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வருகிறார்கள், நீ எப்படி கடனைத் திரும்பக் கட்டுவாய்?” என்று மாற்றுத்திறனாளியின் உடல்நிலையைக் கேலி செய்யும் விதமாகத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறிய பாலாஜி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பலமுறை நேரில் சென்றும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் தனது குடும்பத்தில் பலரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் எங்களுக்கு இந்த வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.














