ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, ஏராளமான அலுவலர்கள் பங்கேற்பு:-
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கருவூல மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊரகச் செயலாளர்களை நினைத்திட வேண்டும் இடைக்கால ஓய்வூதியம் மற்றும் ஒட்டு மொத்த தொகை 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அலுவலர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பைட் :-
சௌந்தரபாண்டியன் – மாநில துணைத்தலைவர்













