தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தகவல் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 2025 26வது நிதி ஆண்டில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார் கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்கலுக்கான மானியம் அளிக்கும் திட்டம் கபர்ஸ்தான மற்றும் அடக்க
ஸ்தலங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டம் பள்ளிவாசல் புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.













