கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி – காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மனைவி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நாடினார் இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி விக்டோரியா கௌரி – தற்போது கணவனின் கஞ்சா விற்பனை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளங்கடை பகுதியை சேர்ந்த தம்பதியினர் அப்துல்லா
(25) ஆயிஷா இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையை உள்ளன இவர்கள் இருவரும் ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றன ஆயிஷாவிற்கு தனது கணவரின் நடவடிக்கைகள் மீது சமீப காலமாக சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆயிஷா தனது கணவருக்கு தெரியாமல் கணவரின் செல்போனை திறந்து பார்க்கும் போது அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பட்டன. ஆயிஷாவின் கணவர் மிகுந்த கஞ்சா போதை பயன்படுத்தும் பழக்கமுடையவர் என்பதும் அவர் வீட்டிலிருந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் போன்ற வீடியோக்கள் கண்டதும் ஆயிஷாக்கு பெரும அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிஷா கணவரின் செல்போனிலிருந்து வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி. அருகிலுள்ள கோட்டாறு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதன் காரணமாக ஆத்திரமடைந்த கணவர் அப்துல்லா தன் குடும்பத்துடன் சேர்ந்து ஆயிஷா வீட்டில் இல்லாத நேரம் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து வீட்டில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில். ஆயிஷா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையை நாடினார் மனு மீதான புகாரை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பாதிக்கப்பட்ட நபர் மீது வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி உத்தரவை தொடர்ந்து கோட்டாறு காவல் நிலையத்தில் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆயிஷா தனது கணவர் செல்போனில் கஞ்சா விற்பனை தொடர்பான வீடியோக்களை கைப்பற்றிய நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி: காஜாமுகைதீன் ( பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை)













