திமுக மாவட்ட துணை செயலாளர் மீது நில அபகரிப்பு புகார், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பு, மாவட்ட வருவாய் அலுவலரை கடந்த வாரம் செல்வமணி, தாக்க முயற்சி செய்த புகாரில், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஜிவிஎம் நகரில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் தியாகராஜன் வருவாய் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் பட்டமங்கலம் ஊராட்சியில் திருவள்ளுவர் தெருவில், கடந்த 2011ம் ஆண்டு ஆயிரம் சதுர அடி நிலத்தை ஜெயலக்ஷ்மி என்பவரிடம் கிரயமாக வாங்கி உள்ளார். இதே பட்டமங்கலம் ஊராட்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் செல்வமணி என்பவர் ரேவதிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் நீதிமன்றம் மூலம் தனக்கு சொந்தமான நிலத்தை ரேவதி மீட்டுள்ள நிலையில், கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, மாவட்ட வருவாய் அலுவலர் காரை மறித்து தகாத வார்த்தைகள் பேசி, ஒருமையில் திட்டி உள்ளார். அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், பட்டமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் திமுகவுக்கு சாதகமாக அந்த புகாரையும் காவல்துறையினர் விசாரணை செய்யாமல், நிலுவையில் வைத்து விட்டனர். ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த வழக்கை காவல்துறை கிடப்பில் போட்டுள்ளது. இந்நிலையில் ரேவதிக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்த செல்வமணி, அவர்கள் செய்து வந்த கட்டடப் பணியை நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், ரேவதி மற்றும் தியாகராஜன் தன்னை தாக்கியதாக காவல்துறையில் நேற்று புகார் அளித்துள்ளார். எதிர் தரப்பில் ரேவதி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும், காவல்துறையினர் திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணிக்கு ஆதரவாக ரேவதி மற்றும் அவரது கணவர் தியாகராஜன் ஆகியோரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேவதி தம்பதியினர் புகார் அளித்தனர், அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். திமுக ஆட்சி நிறைவடைந்தாலும் காவல்துறையினர் திமுகவுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பைட்: –
ரேவதி பாதிக்கப்பட்டவர்













