தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் செம்பனார்கோயிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் சார்பில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி முழு கடன் தொகைகளையும் தள்ளுபடி செய்யாததை கண்டித்து, காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் செம்பனார்கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்சனையில், தமிழக அரசு மெத்தன போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர். குறுவை சாகுபடிக்காக 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், குறைந்த மின்னழுத்த மின்சாரம் காரணமாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை உள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.













